இன்றைய தமிழக அரசியலை நையாண்டி செய்யும் ஒரு நகைச்சுவை பதிவு.....
அமெரிக்காவில் ஒரு நீண்ட க்யூ நான் நின்று கொண்டிருந்தேன்..
பின்னால் நின்ற ஒருவர் தான் முன்னால் போக வேண்டும் எனக்கு அவசர வேலை இருக்கிறது என கெஞ்சினார்..
நான் முடியாது என மறுத்தேன்... இல்ல முக்கிய வேலை... திரும்ப நச்சரித்தார்...
அலோ அப்போ எங்களுக்கு வேலை இல்லியான்னு பொரிந்து தள்ளினேன் கப் சிப் ஆனார்.
சிறிது நேரம் கழித்து தயக்கமாக காதருகே வந்து கேட்டார் இந்தியாவில் நீங்க எந்த ஊர்ன்னு..
தமிழ்நாடுன்னு சொல்லிட்டு என்பக்கம் திரும்பிட்டேன்..
ஐந்து நிமிடம் கழித்து தோளை யாரோ சுரண்டினார்கள்.. திரும்பினால் அவரே தான்
ஆனால்
கையில் ஒரு பத்து டாலரை காட்டி மெல்ல என்னைப் பார்த்து கண்ணடித்தார்...
அடேய்ய்ய்ய்
#தமிழகமக்கள்னா_காசுன்னு_உங்களுக்கும்_தெரிஞ்சிடுச்சா
நன்றி......வெங்கடேஷ் ஆறுமுகம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |
0 comments :
Post a Comment